அப்புசாமி மகனும், ஆறுமுகன் மகனும் டவுசர் போடாததற்க்கு முன்பிருந்தே நண்பர்கள்
இருவரின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதி...
ஆ.ம : "அலோ"
அ.ம : "அலோ"யாருங்க் ?
ஆ.ம : அண்ணா, எப்புடியிருக்ரீங்க்?
அ.ம : அட, நீயா..? நல்லாருக்கிறானப்பா...நீ எப்புடி இருக்கற.?
ஆ.ம : ஏதோ போகுதுணா...அய்யன்,அம்மா எல்லாம் சாவுக்கியங்க்ளா?
அ.ம : அல்லாரும் சவுக்கியம்டா, இப்பதான் பாலு ஊத்திபோட்டு வந்து,சாணி அள்ளி போட்டு போட்டு நின்ன ,உன்ற போனு வந்துடுச்சு.
ஆ.ம : நானும் இப்பதாணுங்க் மாட்டாயெல்லாம் புடுச்சு சாலைக்குள்ள கட்டிப்போட்டு,சேரி அண்ணங்க் கூட பேசி போடலாமுணு பண்ணுணங்க்.
அ.ம : அப்பறம் வேற என்ன சமாசாரம்
ஆ.ம : அது ஏனோ நம்ம மாட்டுக்கு,தெக்கால தோப்பு காளையோட சேத்துனா செணை நீக்கமாட்டீதுங்க.விசாலக்கெழமை புள்ளாச்சிலிருந்து டாக்டரு வந்தார்ருனா எனக்கு ஒரு ரிங் உடுங்க, ஊசி போட்டுபோடலாமுங்க.
அ.ம : சேரியப்போவ், அப்றம் அவன்கீனு போனு பண்ணுனான?
ஆ.ம : யாருங்க், அந்த வாக்காலொளி நீங்க சத்தம் போட்டதுக்கு புறகு போனே பண்ணகாணமுங்க்.
அ.ம : அந்த புள்ள முடையப்பா..புடிசாதம் புடிச்சது.இந்த் நாயும் கேக்கமாட்டேன். @%$ளி எல்லாம் பட்டதான் புத்தி வரும்.
ஆ.ம: அண்ணா நம்ம அம்முசி வேற போனு வேணும்னு கேக்குதுங்க, நோக்கிய வாங்க்லாமுங்க்லா,இல்ல ஆப்பிள் வாங்கலாமுங்க்ளா?
அ.ம: அட இன்னும் ஒரு ரெண்டு மாசம் பொரு ஆப்பிள் 6 உடரானாமாஅப்ப ஒண்ணா வாங்கிபோடலாம்..எனக்கும் ஒண்ணு வாங்கோணும். இந்த சாம்சங் S4 நம்முளுக்கு ஆபரேட் பண்ணதெரியல
ஆ.ம : அண்ணோவ், அவன் வேற லைன்ல கூப்ட்ராநுங்க்,கான்பரன்ஸ் போடறதுங்க்ளா..
அ.ம : எடு , அவன இன்னிக்கு இரண்ட்ல ஒண்ணு கேக்கோனும்
ஆ.ம : சொல்றா குப்புசாமி, எப்புடி இருக்கற, பாரு நம்ம அண்ணனும் லைன்ல இருக்கராரு பேசு..
குப்பு : ம்ம், எப்பிடிடா இருக்கறீங்க?
அ.ம : நாங்கெல்லாம் நால்லாதன் இருக்கறோம்..உனக்கு என்னப்பா பிரச்சனை...?
குப்பு : நீ பேசாத நாயே..நீ மூடு.
அ.ம : ம், அப்பறம் ஆறுமுகன் மவனே,பொழுதொட என்ன சாராயம்?
ஆ.ம : அதுதானுங்க் "சாணி வால்க்கர்"..நீங்க?
அ.ம : "சிவாஸ் ரீகல் ", அப்றம் நான் அனுப்புணனே "மிட் நைட் சில்ட்ரன்" நம்ம சல்மான் ருஷிடி எழுதுனது படுச்சுயா.?
ஆ.ம : இல்லீங்க்,இப்பதானுங்க் "டேல் ஆஃப் டூ சிட்டேஸ்" அரவாசி படுசுச்சு முடுச்சுருகரனுங்க்.நீங்க எந்த புக் படிக்கரீங்க்?
குப்பு : டேய், நாய்ய்களா..
அ.ம : நேத்து தானப்பா "இன்ஃபேர்னோ " வாங்குன படிக்கொனும், ஆமா நீ அந்த "பூனம் போண்டா" நடுச்சா நாஸா படம் பாத்யா??
குப்பு : டேய், கேணை ######..###களா..
ஆ.ம : ஆமங்க்ணா..அது ஏனோ எனக்கு புடிக்கலீங்க்..வர வர ஹிந்தி படங்களே புடிக்க மாட்டீதுங்க்..ஏதாவது நல்ல ஆலிவூட் படம் தமில இருந்தா சொல்லுங்க் பாக்கலாம்...
குப்பு: நாசமா போய் தொலைங்கடா கேணைக்####ளா, @$%##
அ.ம : டேய், டேய், அட குப்பு என்னணு சொல்லப்பா..எதுக்கு இத்தன கோவம்..
ஆ.ம: அண்ணா அவன் அப்பவே கட் பண்ணிட்டானுங்க்....
அ.ம : அப்பிடியா..சேரி,சேரி..நான்போயி மேலுக்கு தண்ணீ ஊத்திட்டு, சாரயத்த குடிச்சுபூட்டு,அப்பாரமா ரிங் உடுட்டுமா.?
ஆ.ம : சேரிங்நோவ்...